மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு பறவைகள் வருகை தந்துள்ளன.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு தெரியாமல் வழங்கப்பட்ட 22 வது தொகுதி  பற்றி பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அரசாங்கத் தலைவர்கள் ஒரு முடிவை எடுப்பார்கள் என்று ஜனாதிபதி சட்டத்தரணி ஜெனரல் ஹரிகுப்தா ரோஹனதீர கூறுகிறார்.

ஐ.எஸ் தலைவர் மற்றும் புலம்பெயர் தமிழ் தலைவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் ரகசிய கலந்துரையாடல் நடத்தியுள்ளதாக மார்ச் 03 பாகியங்கல ஆனந்த சாகர தேரர் முன்வைத்த குற்றச்சாட்டை அடிப்டையாகக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இன்று (05) சி.ஐ.டி.க்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

ஆங்கில ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் கல்லூரியை வைத்திய பீடமாக மாற்றும் திட்டத்திற்கு நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

குடும்பத் தகராறில் மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை பேராசிரியருக்கு மரண தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதென்ற விடயத்தில் இலங்கை அரசு தொடர்ந்தும் விடாப்பிடியாக உள்ளது.

எங்களை இந்தப் போராட்டங்களில் இருந்து இல்லாமல் செய்வதற்கும், உளவியல் ரீதியான தாக்கத்தைத் தந்து எம்மை அழிப்பதற்குமான முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள் எங்கள் மீது மாத்திரமல்லாமல் எமது குடும்ப ரீதியிலும் இடம்பெற்று வருகின்றன என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

மியன்மாரில் ஒரு மாதம் முன்பு ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் புதன்கிழமை ஒரே நாளில் குறைந்தது 38 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அரசியலைவிட்டு ஒதுங்கிவிடுவதாகவும் தி.மு.கவின் ஆட்சி அமையவிடாமல் தடுக்க தொண்டர்கள் பாடுபட வேண்டுமென்றும் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா கூறியுள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக சுகாதார தொழிற்சங்கம் ஒன்று இலங்கை அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

COVID காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்ய வேண்டும் என அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது ட்விட்டர் பதிவில் கண்டித்துள்ளார்.

மட்டக்களப்பில் காணி மாபியாக்களினால் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புக்களை கண்டித்து ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் இன்று (3) மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கவனிப்புக்காக நிறுவப்பட்ட மையங்களின் நிர்வாகத்திற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடுவதற்கு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி