மட்டக்களப்பில் காணி மாபியாக்களினால் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புக்களை கண்டித்து ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் இன்று (3) மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பின் பல பகுதிகளில் பொது மக்களின் காணிகளை சட்டவிரோதமான முறையில் அபகரிக்கும் காணி மாபியாக்களின் செயற்பாடுகளைக் கண்டித்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கிரான், ஏறாவூர்பற்று செங்கலடி, ஆகிய பிரிவுகளில் உள்ள அரசகாணிகளுடன் இணைத்து பொது மக்களின் மற்றும் வெளிநாடுகளில் உள்ள காணிகளை ஒரு குழுவினர் விற்பனை செய்து வருவதாகவும் அதற்கு அதிகாரிகள் துணை போவதையும் கண்டித்தும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக இப்பகுதியில் உள்ள காணிகளை அரச அதிகாரிகளுக்கு பணத்தினைக்கொடுத்து ஒரு குழுவினர் நீண்டகாலமாக இவ்வாறான காணி அபகரிப்பினை முன்னெடுத்துவருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி