நிதி அபாயத்தைக் குறைக்க, இலங்கையில் மின்சாரத்திற்கான செலவை ஈடுகட்டும் விலையை
விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்று, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை நடவடிக்கைகளுக்கான தலைவர் எவன் பெப்பஜோர்ஜியோ கூறுகிறார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வை நிறைவு செய்வதற்கு இது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவினால், பணியாளர் நிலை ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.
- மின்சாரத்திற்கான செலவை ஈடுகட்டும் விலையை விரைவில் மீட்டெடுப்பது தொடர்பான முந்தைய நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் தானியங்கி மின்சாரக் கட்டணத்தைச் சரிசெய்தல் பொறிமுறையின் சரியான செயல்பாட்டை உறுதி செய்தல்.
- பலதரப்பு கூட்டாளர்களிடமிருந்து உறுதியான நிதி பங்களிப்புகளை உறுதி செய்வதிலும், கடன் மறுசீரமைப்பில் போதுமான முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தும் நிதி உத்தரவாதங்களின் மதிப்பாய்வை நிறைவு செய்தல்.