வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழுள்ள அனைத்து தேசிய பூங்காக்களும் இன்று (26) முதல் மீண்டும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக ஜந்தர் மந்தரில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.

பிரபல நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய உபேக்ஷா ஸ்வர்ணமாலி, விபத்தொன்றை ஏற்படுத்தியதற்காக கட்டுகஸ்தோட்ட பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி தொடக்கம் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டையினூடாக பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்கள் மற்றும் புத்தளத்தில் இருந்து மன்னாரினூடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சேர்.ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை மீள பெறுமாறும் இலவசக் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பூண்டுலோயாவில் போராட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

புதிதாக செயலாளராக நியமனம் பெற்றிருப்பவர் மக்களின் மொழியில் செயலாற்றமாட்டார் என்பது எல்லோரும் அறிந்த விடயம். அவரின் ஆங்கில அறிவு பற்றியும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒன்று மட்டும் நிச்சயம். அவர் ஊடாக சிங்கள ஆதிக்கம் பலனடையும் தமிழ் மொழிப் பாவனை நலிவடையும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கே.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

தடுப்பூசி போடும் பணி மந்தமாக நடைபெற்று வருவதற்காக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் மன்னிப்பு கோரியுள்ளார்.

அமைச்சர்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விசேட உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதாவது, மேலதிக செலவுகளை ஈடுசெய்யும் வகையில் குறை நிரப்பு பிரேரணையை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொவிட் தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கிராம நிலதாரிகள் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவில் ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த வரலாறு காணாத மழைக்கு 51 பேர் பலியாகி உள்ளனர்.சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.  இதனால் ஏற்படும் பெரு வெள்ளத்திற்கு பலர் உயிரிழக்கின்றனர். பொருட்களும் சேதமடைகின்றன.  இந்த நிலையில், ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்தது.

சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பத்தை தமிழ் மொழியில் நிரப்புவதற்கான உரிமையை இலங்கையர்கள் இழந்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்ததைப் போன்றே கடந்த 10 தசாப்தங்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களின் தவறான கொள்கை காரணமாக தற்போது இலங்கையில் உக்கிரமடைந்து வரும் கடுமையான பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடி சம்பந்தமாக தீர்வு காண்பதற்கான வழிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரத்தை ஒதுக்கித் தருமாறு கேட்டு மக்கள் விடுதலை முன்னணி, உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளுக்கு முன்னிலை சோஷலிஸக் கட்சி கடித மூலம் அறிவித்துள்ளது.

நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறும் பட்சத்தில், பொது மக்களுடன் இணைந்து பௌத்த தேரர்களும் வீதிக்கு இறங்கும் காலம் வெகு தொலைவில் இல்லையென பௌத்த தேரர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி