தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை மறுசீரமைப்பிற்கான முன்மொழிவுகளை பகுப்பாய்வு செய்யும் நிபுணர் குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

வெறும் 63 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட குட்டி நாடான பெர்முடா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மிகச் சிறிய நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, சமூகத்தில் அணுகுமுறையில் மாற்றம் தேவை என சமூக ஆர்வலரும் ஊடகவியலாளருமான பாக்யா வீரகோன் கூறுகிறார்.

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு 17 ஆவது நாளை எட்டியுள்ளது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான நேற்றைய (27) பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றது.

கர்நாடக முதல்- அமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டதை அடுத்து அவர் பதவி விலகினார். இதையடுத்து கர்நாடகத்தின் அடுத்த முதல்- அமைச்சர் யார்? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று இரவு நடைபெற்றது.

பெகாசஸ் உளவு செயலி மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் பக்கசார்பற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'மே 17' இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கு. ராமகிருஷ்ணன், திராவிடர் கழக பொருளாளர் குமரேசன் ஆகியரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவுச் செயலியால் குறிவைக்கப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் 13 ஏக்கர் நிலத்தை சீனாவிடம் ஒப்படைக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.சீன நிறுவனமான சி.ஐ.சி.டி யால் பல்வேறு சேவை வழங்கல் சேவைகளுக்கான மையத்தை அமைக்கும் திட்டத்திற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் கோரி துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நேற்று (26) அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார்.

மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளைப் பார்ப்பதற்காக விளையாட்டு அமைச்சருடன் மூன்று இராஜாங்க அமைச்சர்கள், அனுசரணையாளர்களிடம் இருந்து பெற்ற நிதியைக்கொண்டே ஜப்பானுக்குச் சென்றுள்ளனர் என்றும் அரச நிதியிலிருந்து அல்ல என்றும் அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்க வேண்டிய நிலை காணப்பட்டாலும் நாட்டின் தற்போதைய நிதி நிலைமைகளின் அடிப்படையில் தேவையான மாற்றங்களைச் செய்ய போதுமான நிதி பலம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாற்று எரிசக்திக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த எரிபொருள் இல்லாமல் சூரிய மின்சக்தியால் உலகை சுற்றிய விமானம் தனது பயணத்தை நிறைவு செய்து 5 ஆண்டுகள் முடிந்து உள்ளது. இந்த விமானத்தை இயக்கிய விமானி அவரின் பயணத்தை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சருக்கு இடையில் இன்று (27) பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்பாக விசேட வர்த்தமானி  வெளியிடப்பட்டுள்ளது.அனைத்து சமையல் எரிவாயு சிலிண்டரிலும் அதன் எடை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2015 லண்டன் மாரத்தானில் எல்லைக் கோட்ட தொட்ட எலியட் கிப்சோகி உலகத்திலேயே வேகமாக ஓடும் மனிதர் யாரெனக் கேட்டால், உசேன் போல்ட் என்ற பொதுவான பதில் கிடைக்கும். ஆனால் அந்தப் பதிலை விவாதத்துக்கு உள்ளாக்குபவர் எலியட் கிப்சோகி.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி