பிரபல நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய உபேக்ஷா ஸ்வர்ணமாலி, விபத்தொன்றை ஏற்படுத்தியதற்காக கட்டுகஸ்தோட்ட பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 ஆம் திகதி இரவு 11 மணியளவில் கண்டியில் இருந்து குருநாகலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவில் உள்ள நுகவெல பிரதேச செயலகம் அருகே எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளில் அவர் சென்ற வாகனம் மோதியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 18 வயது இளைஞர் ஒருவர் பேராதெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி