1200 x 80 DMirror

 
 

சீர்குலைக்கும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறியதன் மூலம் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ஆட்சியின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கையானது என இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக (Dayan Jayatilleka) தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய சந்தையில் நுழைவதற்கு கட்டணச் சலுகைகளை தொடர்ந்து வழங்குவதற்கு முன்னதாக, முதலீட்டு ஊக்குவிப்பு வலையங்களில் உள்ள நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகளைப் பற்றி ஆராயுமாறு, தொழிலாளர் உரிமைகளுக்காக வாதிடும் ஒரு அமைப்பு ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

500 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. விவசாயத்துறை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக உலக வஙகியினால் வழங்கப்படும் இந்தக் கடன் பணத்தின் ஊடாக சில மாவட்டங்களில் கிராமங்களில் வசிக்கும் சுமார் 16 மில்லியன் மக்கள் பயனடைவார்களென உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.

தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் குயாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அவ்வப்போது கோஷ்டி மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பந்தமாக வெளிநாட்டு மக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முறைப்பாடு நவம்பர் 02ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

"ஊரடங்குச் சட்டத்தை ஏற்கனவே நகைச்சுவையாக்கிய அரசு, தற்போது அவசரகாலச் சட்டத்தையும் நகைச்சுவையாக்கியுள்ளது. நெருக்கடியான கட்டங்களிலேயே அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படும். ஆனால், ஒடுக்குமுறைக்காகவே இந்த சட்டத்தை தற்போதைய அரசு கொண்டுவந்தது. அது உடன் நீக்கப்பட வேண்டும்." இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்க்கோசிக்கு 2012 ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரச்சாரத்தில் அதிக செலவு செய்ததற்காக சட்டவிரோத பிரச்சார நிதியுதவி செய்த குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு ஒரு வருட சிறைத்தண்டனை தீர்ப்பை நீதிமன்றம் விதித்தது.

இன்று சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.ஒருபுறம் தமது பிள்ளைகளுடன் சில பெற்றோர் இந்நாளை கொண்டாடும் நிலையில், மறுபுறம் தமது பிள்ளைகளை எதிர்பார்த்து கண்ணீருடன் காத்திருக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும். இல்லாவிட்டால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி