ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு அந்த கட்சி தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், அவர்கள் கட்சி உறுப்புரிமையிலிருந்தும் கட்சிப் பதவிகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
 
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து எம்.பி.க்களுக்கும்  எதிராக நடவடிக்கை எடுக்க கட்சி தீர்மானித்துள்ளது..
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி