அரசுக்கும் எதிர்கட்சிக்கும் சிநேகபூர்வமான தொடர்புள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க
தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சவை நாங்கள்தான் மின்சார கதிரையில் இருந்து காப்பாற்றினோம் அவருக்கு எதிராக பல நாடுகள் முன்னனியில் நின்றன.

உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது ஆனால் நாட்டில் விலைக்குறைப்பு செய்யவில்லை இதனால் பொது மக்களை கஸ்டத்துக்குள்ளாக்குவது உங்களது எதிர்பாரப்பு என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய விசாரணை நடாத்துவதற்காக புதிய யோசனை 05 வருகின்ற 24 ம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கும் ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளது இதனால் மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத நிலைமை தோன்றியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அன்மையில் வெளிடப்பட்ட சாய்ந்தமருது நகரசபை உருவாகுவதற்காக வெளிட்ட வர்த்தமானி அறிக்கையை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை இல்லாது போயுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

இலங்கை விமானக்கூட்டுதாபானத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் கபில சந்தசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேனாயக்கவின் வங்கிக்கணக்கிலிருந்து 8 இலசம் டொலர் செபர் பியத் கோல்டிங் நிறுவனத்தின் அதிகாரி நிமால் பெரேராவின் பெயருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நேற்று (19) கோட்டே நீதிமன்ற விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

பிரபல சிங்கள நடிகர் காவிங்க பெரேரா இன்று அதிகாலை 12.45 மணியளவில் தலங்கம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று கண்டி நகரில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களால் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஓய்வூதியக்காரர்கள் புதிய ஆண்டில் தமது ஓய்வூதியதொகையை அதிகரிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை முன்நெடுத்தனர்.

மிக் விமான கொல்வனவு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி அமெரிக்கன் டொலர் பில்லியன் 7.833 ரூபாவாகும். இது சம்பந்தமாக விசாரணை நடாத்தும் பொருட்டு நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் இந்த விமானக் கொள்வனவு விடயம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.

புறக்கோட்டை மெனிங் சந்தையிலும் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திலும் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

குருநாகல் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சரத் வீரபண்டார எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடவுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. இத்தேர்தலுக்கு அவரை வைத்தியசாலையின் நிர்வாககுழு பெயரிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கோவிட்-19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து சீன மருத்துவ அதிகாரிகள், 44,000 பேருக்கு அதிகமானோரின் தகவல்களை முதன்முறையாக வெளியிட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி