அவிசாவளை − மாலியன்கம − ரிட்டிகஹவெல பகுதியில் பஸ் ஒன்றை பிரதேசவாசிகள் தீ வைத்து, தீக்கிரையாக்கியுள்ளனர்.

பஸ்ஸில் மோதுண்டு, சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் பஸ்சுக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சாலையில் பணிப் புரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே, இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 65 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தை அடுத்து, பஸ்ஸின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவிசாவளை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைத் தந்து, பஸ்ஸை தமது பொறுப்பிற்கு எடுக்க பொலிஸார் முயற்சித்த தருணத்திலேயே, பஸ்ஸிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைதியின்மையினால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி