தலைநகரில் அமைந்துள்ள பிரபலமான ஆண்கள் கல்லூரின் ஒன்றின் அதிபரை நீக்கி, ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாக  ஓய்வுபெற்ற அதிபரை நியமிக்க சதித்திட்டம் தீட்டப்படுவதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று குற்றம் சாட்டுகிறது.

எனது தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது உருக்கமாகப் பேசினார்.

பாரதிய ஜனதா கட்சி நேபாளம் மற்றும் இலங்கையில் தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான அமித் ஷாவை மேற்கோள்காட்டி திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் வெளியிட்ட கருத்து இலங்கையில் பேசு பொருளாக மாறியுள்ளது.

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து, வைத்தியசாலை சுகாதார கனிஷ்ட உத்தியோகத்தர்கள் இன்று (17) அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரிட்டனில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த பத்து வருடங்களில் நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய பெரும்பாலான உயிரினங்கள் இலங்கையில் அழிவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறும் இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பதற்கான தேசிய நிறுவனத்தின் பணிகள் குறித்து நாடாளுமன்றக் கோப் குழு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் மர நடுகை நிகழ்வில் ஈடுபட்டமைக்கு, ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன.

பிரித்தானியாவில் சில முன் நாள் போராளிகளை சந்தித்துள்ள இந்திய புலனாய்வுத்துறை(RAW), மீண்டும் இலங்கையில் ஒரு போராட்டம் வெடிக்க வேண்டும் என்றும். இம் முறை நாங்கள் முழு ஒத்துழைப்பையும் தருகிறோம் என்று கூறியுள்ளார்கள். பல முன் நாள் போராளிகள் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்கள். மேலும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் சென்ற சில போராளிகள், பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்கள் என அறியக்கிடைக்கின்றது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கல்முனை நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் பேர் வாங்கிய கூத்துக்கலைஞர் தங்கராசுவை இப்போதும் எவரும் மறந்து விடவில்லை. முதல் படத்திலேயே தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தபோதிலும் "வறுமை" அவரை விட்டு நீங்கவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததாகக் கூறப்படும் சாய்ந்தமருது எம்.எம்.ஆதம்பாவா அவர்களின் ஜனாஸாவை எதிர்வரும் மார்ச்-18 ஆம் திகதி வரை தகனம் செய்யாமல் வைத்திருக்குமாறு கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு உரித்தான காணியில் சீனாவிற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் அமைந்துள்ள இலங்கை கடற்படை முகாமை வேறு இடத்திற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடந்த 7 ஆம் திகதி ஆங்கில நாளேடு ஒன்றில் செய்தி வெளியானது.

பாடசாலைக்குச் சென்ற முதல் நாளே விபத்தில் சிக்கி 6 வயதுடைய சிறுவன் பலியாகியுள்ள சம்பவம், பதுளையில் இன்று(15) பதிவாகியுள்ளது.

நாம் காலாகாலமாக வாழ்ந்துவந்த காணியை மீட்டுத்தாருங்கள் என பொத்துவில் 60ஆம் கட்டை கனகர்கிராம தமிழ்மக்கள் மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.நேற்று (14)ஞாயிற்றுக்கிழமை அவர்கள் 906வது நாளாக போராட்டக்கூடத்தில் குழுமியிருந்தவேளையில் அங்கு வழக்கமாகச்சென்று உதவிவரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளரும் சமுக உணர்வாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலிடம் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி