அமெரிக்காவிற்கு சென்றிருந்த பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் பிரதானி பசில் ராஜபக்ஸ இன்று (24)  காலை நாடு திரும்பியுள்ளார்.

துபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைதந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே – 650 விமானத்தில் அவர் நாடு திரும்பியுள்ளார்.

கடந்த மே மாதம் 12 ஆம் திகதி பசில் ராஜபக்ஸ நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தார்.

நாடு திரும்பிய பசில் ராஜபக்ஸவை வரவேற்பதற்காக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி