எரிவாயு தொடர்பான பிரச்சினை முழு நாட்டுக்காமான பிரச்சினையாக உருவாகியுள்ள நிலையில் அரசு அதற்குப் பதிலளிக்க முடியாமல் திணறுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Withanage) தெரிவித்துள்ளார்.

மதக் குழுக்களுக்கு இடையில் பகைமையை தூண்டிய குற்றச்சாட்டில் 8 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சீனா முன்னெடுத்து வரும் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்துக்கு கச்சிதமான மாற்றாக, 300 பில்லியன் யூரோ மதிப்பிலான உலகலாவிய முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். அத்திட்டத்துக்கு 'குளோபல் கேட்வே' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) கொவிட் வைரசின் ஐந்தாவது அலை உலகளாவிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக  எச்சரித்துள்ளது, ஆனால் சுகாதார அமைச்சர் வரவுசெலவு திட்டத்தில் சுகாதார சேவைக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கொள்ளுப்பிட்டியை சுற்றியுள்ள வீதிகளில் வாகன நெரிசல் காரணமாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் தாமதமாகி ஆரம்பித்ததாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வீட்டு எரிவாயு அல்லது சிலிண்டர்கள் தொடர்பான பிரச்சனைகளை 1311 என்ற ஹொட்லைன் இலக்கத்திற்கு தெரிவிக்கலாம்.

தமிழ் முற்போக்கு கூட்டணி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின பெண் ஒருவர் நிராயுதபாணியாக நின்று சிறுத்தையுடன் சண்டையிட்டு தன் 6 வயது மகனை அதன் பாதங்களில் இருந்து பத்திரமாக மீட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாதகல் பிரதேசத்தில் கடற்படையினரை ஈடுபடுத்தி தனியார் காணிகளை வலுக்கட்டாயமாக கையகப்படுத்த மேற்கொண்ட முயற்சியை பெண்கள் உட்பட பிரதேச மக்கள் தோற்கடித்துள்ளனர்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி