விபத்தை எதிர்கொண்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகர் ஜெக்சன் அந்தனியை பார்ப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று சென்றிருந்தார். 

நாடளாவிய ரீதியில் நாளையும் (20) நாளை மறுதினமும் (21)  நாளாந்தம் 3 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்ட 16 பேரை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு 05 மற்றும் கொழும்பு 06-இல் நாளை 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வைத்தியசாலையின் பணிப்பாளரைச் சந்தித்து நோயாளர்களுக்கான மருந்து பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்தோனேஷியா 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொதியை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்தோனேஷிய தூதரகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தில் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி பல மில்லியன் கணக்கான மக்களை வறுமைக்குள் தள்ளியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) அறிக்கை வௌியிட்டுள்ளது. 

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி