தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பலப்படுத்தக் கூடிய தலைவராக

இருப்பதால், ஜனாதிபதிக்கு பலமாக  இருப்பதற்காகவே  தான் கட்சி  மாற தீர்மானித்ததாக மொனராகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷான் நவநந்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பலப்படுத்தக் கூடிய தலைவராக இருப்பதால், ஜனாதிபதிக்கு பலமாக  இருப்பதற்காகவே  தான் கட்சி  மாற தீர்மானித்ததாக மொனராகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷான் நவநந்தன தெரிவித்துள்ளார்.

நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதன் மூலம் நாட்டை திருத்த முடியும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது செயற்பாட்டின் மூலம் நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே,  மே முதலாம் திகதி  நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் இணைந்து கொள்ளத் தீர்மானித்ததாகவும், தாம் இன்னும் கட்சி உறுப்புரிமையைப் பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் மொனராகலை மாவட்டத்திலிருந்து கயாஷான் நவநந்தா பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் உண்மையான கட்சி வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணியாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி