தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன், தனது 91ஆவது வயதில் இன்று (29) காலமானார்.

கனடா – டொராண்டோவிலுள்ள வைத்தியசாலையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஈழவேந்தன் தனது 72வது வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

1932ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி பிறந்த கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட அவர், தமிழீழத்தின் பால் கொண்ட பற்றின் காரணமாகத் தனது பெயரை ஈழவேந்தன் என மாற்றினார்.

தமிழீழக் கொள்கைகளில் தீவர ஆதரவாளராகச் செயற்பட்ட ஈழவேந்தன் 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்துக்குச் செல்லாத காரணத்தினால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2007 நவம்பரில் பறிபோயிருந்தது.

இதனையடுத்து, இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறியிருந்த நிலையில், இலங்கை நேரப்படி நேற்றிரவு உயிரிழந்தார்.

 

 

01 WhatsApp Tamil 350

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி