இலங்கையில் டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசிடம் கோரிக்கையை முன்வைத்தது.

அரசுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம்  5 ஆவது நாளாக இன்றும் தொடரந்து முன்னெடுக்கப்படுகிறது.


நாட்டின் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதிகாரத்தை அடைவதற்கான பிரத்தியேக கொள்கைகள் இருக்கலாம். ஆனாலும் நாட்டின் இளைஞர்கள் தானாக முன்வந்து பரிந்துரைகளை முன்வைக்கும்போது அதற்கு செவிசாய்ப்பது எமது கடமையாகும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டி வடக்கின் அரசியல் கட்சிகள் கூட்டாக அறிக்கை!நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் வரம்பற்ற அதிகாரங்களுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என வடக்கின் அரசியல் கட்சிகள் கோரிக்கை முன்வைத்துள்ளன.


ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் மோதுவதற்கு இன்று (12) ராஜபக்ச ஆதரவு பிக்குகள் குழுவொன்று தயாராகி வருகிறது.

 தொடர் போராட்டத்தை கைவிடுமாறு கோரி நேற்றைய தினம் பிரதமர் மக்களுக்கு விசேட உரையாற்றி கேட்டுக்கொண்ட போதிலும் கொழும்பு - காலி முகத்திடலில் தற்போதைய அரசாங்கத்தை வீடு செல்லுமுாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அமைதியான போராட்டங்களுக்கு செவிசாய்க்கா விட்டால் இது புரட்சியாக மாறும் - ரணில்!சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு மேலும் வற்றிப் போகும் என் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 


இங்கிலாந்தின் 2019 ஆம் ஆண்டுக்கான ஒலிவர் விருது வழங்கல் விழாவில் இலங்கையின் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

நாட்டை  அழிவிலிருந்து மீட்டெடுப்பது நம் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். அனைவரதும் பொறுமையும் தைரியமும் இச்சந்தர்ப்பத்தில் நாட்டிற்கு தேவையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஆற்றிய விசேட உரையில் தெரிவித்தார்.

 முன்னதாக பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருந்ததாக தகவல் வெளியான போதும் பின்னர் அதனை மறுத்து பிரமர் ஊடக பிரிவு அறிக்கை வெளியிட்டிருந்தது.


தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இளைஞர் குழுக்களும் சமூக ஊடக ஆர்வலர்களும் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு இளைஞர் சமூகம் ஆதரவளிக்க வேண்டுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 3 ஆவது நாளாகவும் வெற்றிகரமாக தொடரும் மக்கள் போராட்டம்! ஜனாதிபதி செயலகத்திற்கு முன் தொடர்ந்து 3 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. 

இன்று ஏப்ரல் 3ஆம் திகதி போராட்டத்தின் முக்கியமான ஒரு தினமாகும். யார் எதைச் சொன்னாலும் இந்த போராட்டம் நாட்டிற்கு சாதகமான ஒன்று.

ஏப்ரல் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் இன்னும் முன்நோக்கி கொண்டு செல்கின்றது. இன்னும் இந்தப் போராட்டம் பின்நோக்கி திரும்பவில்லை.Gota Go home என்ற அந்த ஸ்லோகன் தற்போது எல்லோரும் எடுத்துள்ளார்கள்.

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் ஆளும் கட்சிக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி