ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் மோதுவதற்கு இன்று (12) ராஜபக்ச ஆதரவு பிக்குகள் குழுவொன்று தயாராகி வருகிறது.


கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கிற்கு அருகிலிருந்து இந்த பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த ஆர்ப்பட்ட குழு ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதிக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளைத் துணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வண.வட்டினாபஹ சோமானந்த தேரரிடம் இந்த நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவொன்று தீவிரவாத இனவாதிகள் குழுவுடன் இணைந்து மக்கள் போராட்ட பூமியை ஆக்கிரமிக்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

‘சிங்கள பௌத்த ஆணைக்கு கை வைக்கும் பொய்யான போராட்டங்களுக்கு ஏமாறாதீர்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த எதிர்ப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுவேளை, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் காலிமுகத்திடல் பகுதியில் பல உளவாளிகள் இறக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், இப்போராட்டத்திற்கு ஆதரவாக இலட்சக்கணக்கான மக்கள் தற்போது போராட்டக்களத்தில் திரண்டு வருகின்றனர்.

அரசாங்கம் எவ்வளவு ஆத்திரமூட்டல் செய்தாலும், அமைதியான முறையில் செயல்பட வேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் போர்க்களத்தில் உள்ள அமைப்பாளர்கள், வலியுறுத்துகின்றனர்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

அரசாங்கம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு பாடம் கற்பிக்க போவதாக கூறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையிலான இந்த சதி குறித்து ஏற்கனவே இலங்கை தூதரகங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு மோதல் வலயத்தில் உள்ள இளம் செயற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி