அரசுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம்  5 ஆவது நாளாக இன்றும் தொடரந்து முன்னெடுக்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகும் வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் போராட்டக்களத்தை விட்டு செல்லப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர்

.ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்கான ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை  'கோட்டா கோ கம'  என  பெயரிட்டுள்ளதோடு புதுவருட  நிகழ்வுகளையும் முன்னெடுத்துள்ளனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் இளைஞர், யுவதிகள் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் என அரசுக்கு எதிராக ஒன்றுதிரண்டுள்ள மக்கள் கடும் மழைக்கு மத்தியிலும் இரவிரவாக இன்று 5 ஆவது நாளாகவும் எழுச்சி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி