காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அகற்ற எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு பொலிஸார் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை ஞாயிற்றுக்கிழமை (17) யாழ்ப்பாணம் நகரில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இலங்கையின் தற்போதைய நிலையை சமாளிக்க, சுமார் 4 பில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்கு 
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF)  பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே தீர்வாகும் அதனை இல்லாதொழித்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளது.


ஜனாதிபதி, பிரதமரை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடல் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டக்களத்துக்கு பொலிஸ் சார்ஜன் ஒருவர், பொலிஸ் சீருடையில் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சம்பவம் பலரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக காலி முகத்திடலில் திரண்டிருந்த போராட்டக்காரர்களை பிரதமர் என்ற முறையில் சந்தித்து கலந்துரையாட தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.


ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி காலி முகத்திடலை நோக்கி முன்னெடுக்கப்பட்ட புத்த பிக்குகள் தலைமையிலான பயணம் புதிய நகர மண்டபத்திற்கு அருகில் நிறைவடைந்தது.
இந்த ஆர்ப்பாட்டம், காலி முகத்திடலில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நேக்கில் முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

காலிமுகத்திடலில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும்  இளைஞர்களின் கோரிக்கையின்  அடிப்படையில்  ராஜபக்ஷ வம்சத்தின் இளம் அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்துடனும், ராஜபக்ஷர்களுடனும் இனி எவ்வித கொடுக்கல் வாங்களும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த நாட்டு மக்களுக்கு விசேட உரையை உண்மையில் அரசியல் தெரிந்தவர்களுக்கு என்றால் அந்த ஒரு கதையை விளங்கிக்கொள்ள முடியாமலில்லை. இன்று எங்களுடைய நாட்டில் இருக்கக்கூடிய இந்த நெருக்கடிக்கு முன்னால் ராஜபக்சக்களின் அடுத்த கட்ட ஏற்பாடு என்ன என்று மிகத் தெளிவாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 'அத தெரணவிடம்' தெரிவித்துள்ளார்.

தனது வாழ்நாளில் இவ்வாறானதொறு ஆட்சியை கண்டதுமில்லை கேட்டதுமில்லை என இலங்கையின் பழம்பெறும் பாடகி நந்தா மாலினி தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி