Feature

இலங்கையில் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றத் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் விலகுவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அதன் பங்குகள் 3% உயர்வை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது, அந்தத் திட்டத்தின் நம்பகத்தன்மை குறித்த கவலைகளைத் தணித்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையின் புதிய அரசாங்கம், கடந்த மாதம் இத்திட்டம் தொடர்பில் குறைந்த கட்டணங்களைக் கோரியதைத் தொடர்ந்து, இரண்டு காற்றாலை மின் திட்டங்களிலிருந்து வெளியேற அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த ஆலைக்கு அரச ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அது தொடர்பான முடிவு காரணமாக இந்த விலகல் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, அந்நிறுவனம் கூறியுள்ளது.

நிலத்தை விடுவிக்கும் போது எழுந்த சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளாலும் இத்திட்டத்தின் எதிர்கால இலக்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 1 பில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்ட திட்டங்களிலிருந்து மின்சார செலவைக் குறைக்க அதானி குழுமத்துடன் கடந்த மாதம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக  இலங்கை அரசு தெரிவித்திருந்தது.

திட்ட முன்மொழிவு தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவையால் மற்றொரு குழு நியமிக்கப்பட்டதாக,  நிறுவனம் ஒரு கடிதத்தில் கூறியுள்ளது.

மேலும், குறித்த நிறுவனம் இலங்கையின் இறையாண்மை உரிமைகளையும் அதன் தேர்வுகளையும் முழுமையாக மதிக்கிறது என்றாலும், அந்த திட்டத்திலிருந்து மரியாதையுடன் விலகுவதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம், அதானி குழுமத்தின் பில்லியனர் நிறுவனர் கௌதம் அதானி மற்றும் பிற நிர்வாகிகள், இந்திய மின்சார விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு இலஞ்சம் கொடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இலங்கை அதானி குழுமத்தின் உள்ளூர் திட்டங்களை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியது. எனினும், அதானி தரப்பு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தனர்.

இலங்கையின் மிகப் பெரிய துறைமுகமான கொழும்பில் 700 மில்லியன் டொலர் முனையத் திட்டத்தைக் கட்டுவதிலும் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடியின் போது முடக்கப்பட்ட மின் தடை மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் பணமில்லாது பாதிக்கப்பட்ட இலங்கை, தற்போது இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் செலவுகளில் ஏற்படும் அதிகரிப்பைத் தடுக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்த முயற்சித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Feature

சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக அவரைப் பாதுகாக்கத் தயங்க

Feature

உலக காலநிலை பிரச்சினைகள் வறியவர் செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளை

Feature

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பீங்கானால் நபரொருவரை தாக்கிய விதம் சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர் தற்போது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (11) இரவு அர்ச்சுனாவுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, ​​அதை எதிர்த்த இரண்டு நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, ஒருவரை பீங்கானால் தாக்கியுள்ளதுடன், அந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

இருப்பினும், எமது செய்தி சேவை விசாரித்தபோது, ​​பாராளுமன்ற உறுப்பினரும் தாக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Feature

நாட்டில் நாளைய தினம் முதல் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து நாளை காலை தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பௌர்ணமி தினம் காரணமாக இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 3 மின் உற்பத்தி இயந்திரங்களும்  வெள்ளிக்கிழமை வரை செயலிழந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நாளை முதல் மீண்டும் மின்வெட்டினை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் நாளை காலை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்நிலையில்  தற்போது ஏற்பட்டு மின்நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நிலைமை இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான வழிமுறை தொடர்பில் ஆராய்ந்து வருதவாக அவர் குறிப்பிட்டுள்ளார்..

மின்வெட்டு எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Feature

பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா இராமநாதன் தாக்கியதாகக் கூறி, இரண்டு நபர்கள் யாழ்ப்பாணம் பொது

Feature

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நாட்டு யுத்தத்தின் போது 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கியை

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி