யாழ்.நெடுந்தீவிலிருந்து வடதாரகை படகில் பயணம்செய்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் வடதாரகை படகுசேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றிருக்கின்றார்.

இதன்போது நேற்றையதினம் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து குறிகட்டுவான்-நெடுந்தீவிற்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் வடதாரகை படகு சேவை தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

எனினும் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்காக கூட்டுறவு சங்கத்தின் சமூத்திரதேவா படகு சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி