கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் மத குருமாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்று காணாமற்போன மூன்று மீனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போதும் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் செயற்படுத்தும் போதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

மாலியில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட ராணுவ கேரணல் கொய்டாவை அந்நாட்டு இடைக்கால அதிபராக நீதிமன்றம் அறிவித்து உள்ளது.மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் கடந்த ஆகஸ்டில் ராணுவம், ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.  இதன் எதிரொலியாக அதிபர் இப்ராகிம் பவுபாக்கர் கெய்ட்டா பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். 

சீனாவின் வளரும் பொருளாதாரம் மற்றும் புவிசார் வற்புறுத்தலை நாடுகள் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும்; தனி ஒரு நாடாக சீனாவை எதிர்த்தால் அந்நாட்டைச் சீனா தண்டிக்கும் என முன்னாள் அவுஸ்திரேலியா பிரதமர் கெவின் ரட்  தெரிவித்துள்ளார்.

கப்பல் மூலம் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமக்கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை மாதம் 24ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

இரண்டு சர்வதேச துறைமுகங்களில் அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைவதற்காக நங்கூரமிட்டிருந்தபோது தீப்பிடித்த வணிகக் கப்பலில் அடங்கியிருந்த இரசாயனங்கள் கடல் வாழ் உயிரினங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக கடல் சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

20 ஆம் நூற்றாண்டில் தென் ஆபிரிக்க நாடான நமீபியாவில் இனப்படுகொலை செய்ததாக ஜேர்மனி அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

இலங்கைக்கு இதுவரையிலும் வழங்கப்பட்டிருந்த நிதி ஒதுக்கீடுகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக  வந்துள்ள உலக வங்கியின் விசேட பிரதிநிதிகள் குழு மே மாதம் 17ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 17ஆம் திகதி வரை நாட்டில் பல பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவதாக ஆரம்ப சுகாதார சேவைகள் அமைப்பின் செயற்திட்டப் பணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மக்களிற்கு தடுப்பூசி வழங்கி காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும் என இந்திய தூதுவருக்கு  நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் அவசர கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து 4-வது முறையாக சிரிய அதிபராக பஷார் அல் அசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.  இந்தத் தேர்தலில் அதிபர் ஆசாத் மீண்டும் போட்டியிட்டார். அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அப்துல்லா சலூம் அப்துல்லா, மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மஹ்மூத் அகமது மரே ஆகிய இருவர் போட்டியிட்டனர்.

ஜப்பானிய சரக்கு கப்பலுடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று மோதியதில் காணாமல் போன 3 மாலுமிகளை தேடும் பணி நடந்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கப் போகின்றோமோ இல்லையோ, உணவுக்கு வழியின்றி, பட்டிணி கிடந்து, வெகுவிரைவில் சாகப்போகின்றோம் என முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

மொரட்டுவ நகர சபை மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண் வைத்தியரை அச்சுறுத்தியமை மற்றும் சுகாதார அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுக்காக அவர் கைதாகியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி