1200 x 80 DMirror

 
 

அம்பாறையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஷாஹிர் ஹான் பாரூக் எனும் சுதந்திர ஊடகவியலாளருக்கு அக்கரைப்பற்று பொலிஸாரால் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அமைச்சர் டளஸ் அழகப்பெரும சம்பந்தமாக தற்போது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கதைகள் பரவி வருவதாக தெரியவருகிறது. அமைச்சர் டளஸ் அழகப்பெரும (Dalas Alahapperuma ) பெரும் ஏமாற்றத்துடன் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

அரசாங்கம் யுகதனவி உடன்படிக்கையை அடிப்படையாக கொண்டு கூட்டு பொறுப்பை மீறியதாக பேசுவதை விட அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய பொறுப்புறுதியை மீறியமை சம்பந்தமாக தேடி ஆராய வேண்டும் என ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (Vidura Wickramanayaka) தெரிவித்துள்ளார்.

இப்போதுதான் தொழிற்சங்க ஆட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இனி போக, போக என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அக்கரபத்தனை பிளான்டேசனால் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் எமது தொழிற்சங்க நடவடிக்கையும் கடுமையாகவே அமையும் .” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், தமது சம்பளத்தை உயர்த்தக் கோரி தனியார் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வரவு செலவுத்திட்டம் தொடர்பான கூட்டங்கள் நடைபெற்ற காலத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்காக சுமார் 80 கோடி ரூபாய் செலவாகியதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றினார்.

நாடு முழுவதிலும் உள்ள மருந்துகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்தியாவுக்குத் தேவையெனில் கூடுதலாக ரஃபேல் விமானங்களை அனுப்பத் தயார் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

இனியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவுசெய்யப்படாமல் இருக்கமுடியாது என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் உறுதியாகவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

சீனாவை , சிங்கள மக்கள் ஆரம்பத்தில் பெரிது படுத்தவில்லை. பெரும் காலதாமதத்தின் பின் சிங்கள மக்கள் சீனா குறித்து விழிப்படைந்துள்ளனர். அவர்களது எதிர்ப்பு காரணமாக , இப்போது சிங்கள பகுதிகளை விட்டு சீனா பின்வாங்கி விட்டது. மலக்கழிவு உரக் கப்பல் பிரச்சனைதான் விசுவரூபம் எடுத்தது. இலங்கை வங்கியை பிளாக் லிஸ்ட் பண்ணப் போவதாக வெருட்டியது சீனா.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி