மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்கக் கூடிய இயலுமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே உண்டு!
டிசம்பர் 31 ஆம் திகதி அரசு கோடிக்கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் டொலர் இல்லாத இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு நாணயத்தாள்களை அச்சிடுவதால் இலங்கை ரூபாவின் பெறுமதியைப் பாதுகாக்க முடியுமா? என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன (Ruwan Wijewardene )கேள்வி எழுப்பியுள்ளார்.