மத்திய மாகாணத்தில் முதலாவது கொரோனா நோயாளர் இனங்காணப்பட்டுள்ளார்.மத்திய மாகாணத்தில் முதலாவது கொவிட் 19 வைரஸ் தோற்று பரவிய ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் கடந்த 8 நாட்களாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றும் அங்காங்கே அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையின் முதலாவது மரணம்  பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முதல் ஊரடங்கு சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென கொவிட் 19 ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரொனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 2 டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிவாரணத் தொகைக்கு கையெழுத்திட்டார் அந்நாட்டு அதிபர் டொனாலட் டிரம்ப்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தில் வரை அரச மருந்தகங்கள் தவிர அனைத்து மருந்தகங்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு பதில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

உலகின் ஏனைய நாடுகள் குற்றமிழைத்த இராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்கி இராணுவத்தினரின் நன்மதிப்பை பாதுகாக்கும் ஆனால் இலங்கையில் எட்டுப்பேரைப்படுகொலை செய்த மரணதண்டனைக் கைதிக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றது இதுவே இலங்கையின் நிலை என்று முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர கடுமையாகச் சாடியிருக்கிறார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் BOI வாயிற்கதவுக்கு இன்று காலை வருமாறு பொலிஸாரினால் உத்தரவிடப்பட்டுள்ளனர். தற்போது தொழிலாளர்கள் பல மணித்தியாலங்களாக வைத்தியர்களின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி