குத்தகை தவனை செலுத்தப்படாத வாகனத்தை கடத்துவோர் மீது வாகனக் கொள்ளையின் பேரில் வழக்கு தொடுக்கப்படும்!
கொரோனா தொற்று பரவிய காலத்தில் குத்தகை கடன் தவனை செலுத்த அரசாங்கம் வழங்கியிருந்த நிவாரண காலத்தை பொறுட்படுத்தாமல், வாகனங்களைக் கைப்பற்றிய குத்தகை மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களுக்கு எதிராக வாகனம் திருடியமை அல்லது கொள்ளையடித்தமை ஆகிய குற்றங்களின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபர் சகல பொலிஸ் நிலைய பொறுப்பதகாரிகளுக்கும பரிந்துரை செய்துள்ளார்.