28 சிறைகளில் சாட்சியமளிக்க காணொளி வசதிகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது!
காணொளி தொழில்நுட்பம் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் வழக்கு குறித்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமது வழக்கு விசாரணையை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி, தமிழ் அரசியல் கைதி ஒருவர் முன்னெடுத்த உண்ணாவிரதம் 10 நாட்களின் பின்னர் இடைநிறுத்தப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.