இலங்கையின் தற்போதைய நிலையை சமாளிக்க, சுமார் 4 பில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்கு 
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF)  பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

 
இது தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை (18) சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிதி அமைச்சர் அலி சப்றி தலைமையிலான தூதுக்குழு, இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்த இவ்வார இறுதியில் அமரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளது.

அந்த தூதுக் குழுவில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

குறித்த தூதுக் குழு, வொசிங்டன் நகரில் 5 நாட்கள் தங்கியிருந்து குறித்து பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி