தனது வாழ்நாளில் இவ்வாறானதொறு ஆட்சியை கண்டதுமில்லை கேட்டதுமில்லை என இலங்கையின் பழம்பெறும் பாடகி நந்தா மாலினி தெரிவித்தார்.

நேற்றைய தினம் போராட்ட கலத்திற்கு வருகை தந்த அவர், மக்களுக்கு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.அரசுக்கு எதிரான இளைஞர்களின் தன்னிச்சையான இந்த போராட்டம் நிச்சயம் வெற்றிப்பெறும், முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பாடகி நந்தா மாலினி மேலும் கூறினார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,எனது வாழ்க்கையில் இவ்வாறானதொரு கேவலமானதும்,மக்களை துயரத்திற்குள்ளாக்கிய ஆட்சியை ஒருபோதும் கண்டதுமில்லை ,கேள்விப்பட்டதுமில்லை.அதேபோல் இளைஞர்களின் தன்னிச்சையான போராட்டத்தையும் நான் கண்டதில்லை.

அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தன்னிச்சையாக இளைஞர்கள் ஒன்றினைந்துள்ளார்கள், தங்களுக்கு தேவையானவற்றை இளைஞர்கள் கோரவில்லை.வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து இளைஞர்கள் எதிர்கால தலைமுறையினருக்காக நாட்டையே கோருகிறார்கள்.

'புதிய உலகம் பற்றி நினைப்பது தண்டனைக்குரிய குற்றமாயின் நாட்டில் நீதிமன்றம் மற்றும் சட்டம் எதற்கு'நாம் குறிப்பிட்ட விடயங்கள் இன்று இளம் தலைமுறையினர் விளங்கிக்கொண்டுள்ளார்கள், இளம் தலைமுறையினரின் போராட்டம் நிச்சயம் வெல்லும்.முழுமையான ஆதரவு வழங்குவோம் என்றார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி