ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் போராட்டங்களில் ஒன்று கனடாவில் (அக்.23) இடம்பெற்றது.

2017ம் ஆண்டு மிகிந்தலை பிரதேசத்தில் ஒரு இளைஞனைக் கைது செய்து தேக்கு மரத்தில் தொங்க வைத்து மிருகத்தனமாக தாக்கிய் சம்பவத்தில் அவரது அடிப்படை உரிமைகளை மீறிய இரண்டு காவல் துறை அதிகாரிகளை குற்றவாளிகளாக்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விவசாயிகள் உரமின்றி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹம்பாந்தோட்டையில் FORMULA ONE மோட்டார் பந்தய ஓடுபாதை ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பாக கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக Sunday Times பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

வேலை நிறுத்தம் செய்தமையால் பாடசாலைகளுக்கு சமுகமளிக்காத ஆசிரியர்களின் சம்பளத்தை வெட்டுவதாக பலிவாங்கும் கருத்தைக் கூறிய வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே இலங்கை கம்யூனிஸக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி குறிப்பிடுகிறது.

இந்திய அரசின் வனப் பாதுகாப்புச் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமன்றி, அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. ` காடு என்பது மரங்கள் மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களையும் சேர்த்துத்தான். காடுகளை அழிப்பதற்காகவே இப்படியொரு சட்டத் திருத்தத்தை பா.ஜ.க அரசு கொண்டு வருகிறது' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.

பொதுமக்களின் பணத்தைக் கொண்டு அரசாங்கத்தினால் கட்டப்பட்ட மாலம்பே, ‘இலங்கை தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (SLIIT) மூன்று பேருக்கு சொந்தமாகியுள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப்) தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் அம்பலப்படுத்தியுள்ளார்.

(முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இறந்து இன்றுடன் (24) இரண்டு மாதங்கள் ஆகின்றன.)

சிரேஸ்ட ஊடக விக்டர் இவான் கூறுகையில், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் அரசாங்கத்தின் பார்வை "முற்றிலும் ஜனநாயகமற்றது மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் அரசியலமைப்பு மரபுகள் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முரணானது."

சட்டங்களை தயாரிக்கும் பாராளுமன்றத்திற்கு தான் மொன்டிசோரியிலிருந்து வரவில்லை எனவும், வேறு இடத்தில் தயாரித்த சட்டத்தை முன்வைக்கும் போது சிக்னல் கம்பங்களைப் போல கை தூக்க தயாரில்லை எனவும் கல்வி மறுசீரமைப்பும் மற்றும் திறந்த பல்கலைக் கழக ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று (23) பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழு (கோப்) அறிக்கை சம்பந்தமான சபை ஒத்திவைக்கப்படும் வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

துருக்கிஅதிபர் ரிசெப் தாயிப் எர்துவான், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட 10 நாடுகளின் தூதர்களை வரவேற்கப்படாத நபர்களாக (Persona non grata) அறிவிக்க உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தினர் நாளை (25) காலை 10 மணிக்கு மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளனர்.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்(Vadivel Suresh) தலைமையில், ஹப்புத்தளை நகரில் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

பன்னாட்டு எரிபொருள் சந்தையின் நிலைத்தன்மையை பாதிக்காமல் தங்கள் இலக்கை எட்டுவோம் என்கிறார் முகமது பின் சல்மான்.

பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அவர்கள் விரும்பும் சிறைச்சாலைக்கு மாற்றம் பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும் என்பதோடு அவர்களுக்கு நீதியும் கிட்ட வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் மட்டுமே நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை கொள்வர் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உதவியுடன் வவுனியா மாவட்டத்தில் சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Gajendran) குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மீனவரின் உடல் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி