மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தினர் நாளை (25) காலை 10 மணிக்கு மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளனர்.

இந்தநிலையில், அனைத்து விவசாயிகளும் குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்(Charles Nirmalanadhan) அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த போராட்டமானது மன்னார் - உயிலங்குளம் கமநல சேவை திணைக்களத்தின் முன்பாக இடம்பெறவுள்ளது.

தற்போது காலபோக நெற்செய்கை ஆரம்பித்துள்ளது. அரசின் திட்டமிடாத நடவடிக்கை காரணமாக இந்த நாட்டில் பாரிய உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த அரசு உடனடியாக விவசாயிகளுக்கு உரத்தை வழங்குமாறு கோரி நடைபெற உள்ள இந்த போராட்டத்துக்கு அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்று   நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி