வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி நேற்று (ஜூன் 2) முதல் தொடங்கியுள்ளதாக அரச அச்சு திணைக்களத்தின் கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் நடேசனை சுட்டுக்கொன்ற கொலைகாரர்களை இலங்கை பொலிசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.அவரது 11 வது நினைவேந்தலுக்காக உளவுத்துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்க சுகாதார நிபுணர்கள் வழங்கிய ஆலோசனையை புறக்கணித்து, அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பௌத்த அமைப்பு ஒன்று, தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் மக்களுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட பணத்தை மீளத் கையளிக்க வேண்டுமெனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் பெரிதும் மதிப்பதாக முன்னாள் ராணுவ தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார்.

அலுத்கம தர்கா டவுனில் 14 வயது சிறுவனை அலுத்கம பொலிஸ் அதிகாரிகள் குழு தாக்கியுள்ளதாக அந்த சிறுவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மகர சிறை அதிகாரிகளால் ஒரு கைதி சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடமேல் மாகாணத்திற்கு வெட்டுக்கிளிகள் பிரவேசித்துள்ள நிலையில், அங்குள்ள விவசாயிகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது, ​​அரசாங்கத்தை எவ்வளவு விரைவாக கவிழ்க்க முடியும் என்பது பற்றி யோசித்தோம். எனவே தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டோம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் சிறிது நேரத்திற்கு முன்பு இறந்துவிட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சமூக இடைவெளியை பின்பற்றி தேர்தலை நடத்தும் போது திட்டமிட்ட எண்ணிக்கையிலான வாக்குச் சாவடிகளை விட அதிகமான வாக்கு சாவடிக ல் அவசியம் தேவைப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம்  சமன் ஸ்ரீ திசானநாயக்க கூறியுள்ளார்.வாக்குச் சாவடிகள் கூடுதலாக அமைக்கும் போது அதிகளவான கட்டிடங்கள் தேவைப்படும்  இது ஒரு சவால் நிறைந்த காரியமாக உள்ளது.

புதிய கொரோனா வைரஸ் கொவிட் -19 உலகளாவிய தொற்றுநோய் கட்டுப்பாடுகளை மீரியதற்காக ருமேனிய பிரதமர் லுடோவிக் ஒர்பனுக்கு (Ludovic Orban) 600 அமெரிக்க டாலர் அபராதம் சுமார் (ஒரு இலட்சத்து பதினாயிரத்து எழுநூறு ரூபாய்) அபராதம் செலுத்த வேண்டியுள்ளது.

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின்  ஆத ரவாளர்களால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவுக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிலி / கொத்தலாவபுர பாடசாலையில் தங்கியுள்ள 6 கடற்படை வீரர்கள் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கூற்றுப்படி, சமீபத்தில் பாடசாலைக்கு சென்று வந்த 26 ஆசிரியர்களை தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கல்கிஸ்ச மற்றும் மொரட்டுவ காவல்நிலையத்தில் விளம்பரங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

நேற்று  (30) இரவு 11.55 மணி நிலவரப்படி மேலும் ஏழு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி