அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் ஆசிரியர் - அதிபர் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் நிரந்தரத் தீர்வை வழங்காவிடின் அரசாங்கம் மீண்டும் பாரிய போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நாடளாவிய ரீதியில் வெற்றிகரமான பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் பெய்த கடும் மழைக்கு மத்தியிலும் நவம்பர் 09 செவ்வாய்கிழமை நாடளாவிய ரீதியில் 100க்கும் மேற்பட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக மாகாண செய்தியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நவம்பர் 9 ஆம் திகதியை 'தேசிய எதிர்ப்பு தினம்' என்று அறிவித்து போராட்டங்கள் வெடித்தன, மேலும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, தேசிய வளங்களை அரசாங்கம் குத்தகைக்கு விடுவதற்கு எதிராக தொழிற்சங்கத் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆசிரியர் அதிபர்களுக்கான போராட்டத்திற்கு நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 20க்கும் மேற்பட்ட முன்னணி தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கோரி, ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் பிரதான போராட்டம் நடைபெற்றது.

தலைநகரில் நடந்த போராட்டத்திற்கு பல சிவில் மற்றும் வெகுஜன அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

தேசிய வளங்கள் மற்றும் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவால் அதிகரிக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி பல அரச நிறுவனங்களுக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாகாண செய்தியாளர்களின் கூற்றுப்படி, வர்த்தக வலய ஊழியர்களும் ஹோட்டல் தொழிலாளர் மையங்களும் நாடளாவிய ரீதியில் ஒரு நாள் தேசிய போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

அனைத்து ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிப்பது, வாழ்க்கைச் செலவைக் குறைப்பது, விவசாயிகளுக்கு உரிய உரம் வழங்குவது, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை களைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பது ஆகியனவே இந்தப் போராட்டங்களின் முக்கிய நோக்கங்களாகும்.

நவம்பர் 9 செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் நவம்பர் 10 புதன்கிழமை காலை 7 மணி வரை தொடர் வேலைநிறுத்தத்தைத் தொடங்கி சுகாதார ஊழியர்களும் தேசிய எதிர்ப்பு தினத்தை ஆதரித்தனர்.

ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாட்டை உடனடியாகத் தீர்க்கக் கோரி, ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் இன்று பிற்பகல் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், எதிர்வரும் 12ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், அதற்காக அனைத்து ஆசிரியர்கள் அதிபர்களையும் கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.

 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி