இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா மற்றும் அதன் இலங்கைப் பணிப்பாளர் சென் சென் ஆகியோருக்குமிடையில்  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜெனீவாவில் நேற்று (12) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு தமக்கு சர்வதேச விசாரணையே தேவை எனவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதியை சிறப்பு அரசு விடுமுறை தினமாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சஞ அறிவித்துள்ளது.

தற்போது காணப்படுகின்ற பொருளாதார நிலைமையின் கீழ், அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பொருளாதார மீளெழுச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் விரைந்து தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உபக்குழுவொன்றினை நியமிப்பததற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து தவறான முடிவுகளுக்கும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று தொழிற்சங்கத் தலைவர் ரவி குமுதேஷி சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாட்டு மக்களுக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்திய அனைத்து தவறான பொருளாதார முடிவுகளுக்கும் நாடாளுமன்றமே பொறுப்பேற்க வேண்டும். மத்திய வங்கியின் பிழையான அணுகுமுறை மற்றும் நிதியமைச்சினால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்தன. அந்த முடிவுகளை எடுத்த அதிகாரிகள் மீது பாராளுமன்றத்தில் யாரும் குற்றம் சாட்ட முடியாது. அந்த முடிவுகளை எடுக்கும் முதன்மை பொறுப்பு பாராளுமன்றத்திற்கு இருக்கிறது அல்லவா? அதன் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று நிதி நிர்வாகம். அரசியலமைப்பின் 148 வது பிரிவின்படி. பொது நிதிகள் மீதான முழு கட்டுப்பாட்டையும் பாராளுமன்றம் கொண்டுள்ளது. அதன்படி. நிதி ஒப்புதலுக்காக ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது.

"ஏப்ரல் 12 ஆம் திகதி கடனை மீள செலுத்த முடியாது என்ற ஒரு தீவிரமான முடிவு."

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது. ​​2022ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய கடனாக 6.1 பில்லியன் டொலர்கள் இருக்கும் என்பதை நாடாளுமன்றம் நன்கு உணர்ந்துள்ளது.

ஏப்ரல் 12 அன்றுஇ நாடு கடனை மீள செலுத்த முடியாத நாடு என்று அறிவிக்கப்பட்டது. இது ஒரு தீவிரமான முடிவு. அதைச் செய்தால் என்ன நடக்கும். செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்பது நாட்டின் சாமானிய மக்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு இது பொதுவான முடிவு என்றாலும். நாட்டின் சாமானிய மக்களுக்கு வாழ்வோ சாவோ என்ற இடத்திற்குத் தள்ளிவிடும் முடிவு இது.

இந்த முடிவு தவறானது என்று நாடாளுமன்ற உறுப்பினர்களே கூறுகிறார்கள். அப்படியானால் அவர்கள் ஏன் தங்கள் பொறுப்பை நிறைவேற்றவில்லை?

நிதி அமைச்சும் மத்திய வங்கியும் வெவ்வேறு நபர்களை அடிக்கடி குற்றம் சாட்டுகின்றன. பெட்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். குடிநீர் வளங்கள் அமைச்சு நட்டம் என்று கூறுகின்றனர். அதன் பிறகு எயார் லங்கா விமான சேவை பல கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறுகிறார்கள்.

நீண்ட நாட்களாக எடுக்கப்பட்ட முடிவுகள் சரியானதா? நிதி நிர்வாகத்தின் சமீபத்திய கோட்பாடுகளை சந்திக்கும் அளவிற்கு போதுமான கோட்பாட்டு அறிவு நம்மிடம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி