கட்டுநாயாக்க விமான நிலையத்திலிருந்து எத்தனையோ மைல் தொலைவிலுள்ள மட்டக்களப்பு கெம்பஸில், வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகளை கொண்டுசென்று, கொரோணா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தும் நிலையமாக பெட்டி கெம்பசை மாற்றியமை, சிறுபான்மை மக்களை இலக்கு வைத்தா? என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி கேள்வியெழுப்பினார்.

உலகளாலிய ரீதியில் உள்ள அனைத்து நாடுகளின் பங்கு சந்தையிலும் இன்று பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரை மிகக் கேவலமாக நடாத்துவதற்காக அக்கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து செய்தி கிடைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவில் தற்போது பதவியில் இருக்கும் அதிபர் அஷ்ரஃப் கனி தேர்தலில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அவர் அதிபர் மாளிகையில் பதவியேற்றார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக சமகி ஜன பல வேகய கட்சி தேர்தல் திணைக்களத்திற்கு நேற்று (9) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன ஊடாக தேர்தலில் போட்டியிட வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஜனாதிபதியின் 1௦௦ நாட்கள் கடந்துள்ள நிலையில் 19வது திருத்தச் சட்டத்தால் பிரதமருடன் இணைந்து பணியாற்றுவதற்கு தனக்கு கஷ்டமாக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூரியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு கட்டார் அரசாங்கம் தங்களது நாட்டுக்குள் வருவதற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளதாக தெரிய வருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர் வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் கட்சியை பாதுகாக்க வேண்டுமாயின் தனித்து போட்டியிடுவதே சிறந்தது என்றும் கட்சியின் முன்னிலையில் இருப்பவர்களும் பெரும்பான்மையான தொகுதி அமைப்பாளர்களும் கட்சியின் தலைமைத்துவத்தை கேட்டுள்ளதாக theleader.lk அறியக்கிடைக்கின்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அன்னச்சின்னத்தில் போட்டியிடுவதற்கான கூட்டம் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையின் கீழ் கரு ஜயசூர்யவின் இல்லத்தில் இடம்பெற்றது இக்கூட்டதிற்கு சஜித்தின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அதேவேளை ரணிலின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர  குறிப்பிட்டுள்ளார் குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணை விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளதாக ஹியூமன் றைட்ஸ் போட் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு முன் இலங்கை தேசத்திற்கு அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டிருந்த வேளையில் ஐ .நா மனித உரிமை பேரவை 30/01,40/01 தீர்மானங்களை கொண்டு வந்து இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி இருந்தது.ஆனால் அது  நடை முறைப்படுத்தப்படவில்லையென  அந்த அமைப்பு சர்வதேசத்திற்கு தெரிவித்துள்ளது.

ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி  ஆகிய மூன்று கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டி இடவுள்ளததாக அறியக்கிடைக்கின்றது.

பாலின சமத்துவம் என்பது அடிப்படை உரிமை மட்டுமல்ல, அது சமூக நீதி. இன்று சர்வதேச மகளிர் தினம். இது கொண்டாட்டமாக கட்டமைக்கப்படுகிறது ஆனால் இது கொண்டாடப்படுவதற்காக உருவாக்கப்பட்ட நாள் அல்ல, ஒரு போராட்டத்திற்கான, புரட்சிக்கான விதை விதைக்கப்பட்ட நாள்.

சமகி ஜனபலவேகயவின்  தோற்றத்துடன் ஐ.தே.க இரண்டாக உடைவதைத் தடுப்பதற்காக ஐ .தே.க யின் தலைமைப் பொறுப்பை கருஜயசூர்யவிடம் ஒப்படைக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க கடந்த மார்ச் 2 ம்திகதி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி