இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு கட்டார் அரசாங்கம் தங்களது நாட்டுக்குள் வருவதற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளதாக தெரிய வருகின்றது.

புதிய கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவே இதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்டார் அரசாங்கம் கூறியுள்ளது.

நேற்று (08) கட்டார் அரசாங்கத்தின் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்று (09) இத்தீர்மானம் அமுலுக்கு வந்துள்ளதாகவும் கட்டார் அரசாங்கம் கூறியுள்ளது.

இலங்கை தவிர்ந்த பங்காளதேஷ்,சீனா,எகிப்து,இந்தியா,ஈரான் ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ்,தென் கொரியா சிரியா போன்ற நாடுகளுக்கும் கட்டார் நாட்டுக்குள் உட் செல்வதற்கு  கட்டார் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி