திருகோணமலை எண்ணெய் தொட்டிப் பண்ணையை இந்தியாவிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலம் வரும் போது குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சி, குழந்தைகளை மேலே போட்டுப் பிடித்து புதுமையாகக் கொஞ்சி விளையாடுவார்கள். ஜனாதிபதிக்கு,பிரதமருக்கு அந்த தருணத்திலிருந்த அந்த அன்பு, அந்த கருணை, அந்த கொஞ்சல் இப்பொழுது எங்கே? என உலபனே சுமங்கல தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இத்தாலியிலுள்ள மிலன் நகரில் தனியாருக்கு சொந்தமான சிறிய ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில் அதில் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.

சுனில் பெரேராவின் மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மங்கள சமரவீர அகால மரணம் அடைந்தார்.மங்களவின் மறைவு அரசியலில் ஒரு பாரிய இழப்பு சுனில் பெரேராவின் இழப்பும் இலங்கை கலாச்சாரத்தில் இதேபோன்றதாகும்.

இலங்கை வந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு உள்நாட்டு போரின் போது காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க தீர்மானித்துள்ளது.

மன்னராட்சி நடைபெறும் கத்தாரில் முதல் முறையாக பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

மட்டக்களப்பு  - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட புணானை மேற்கு அணைக்கட்டு பகுதியில் உள்ள 6 நபர்களுக்குரிய காணியில் கிறவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டு பாரிய குழியில் தோண்டி கிறவல் அகழப்பட்டு வருகின்றது.

2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்ரேட், தீவிர அரசியலில் இருந்தே முழுமையாக விலகப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக தனியாகவும் குழுவாகவும் கலந்துரையாட முடியாமற்போனமையால், சில விடயங்களில் தௌிவற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சீர்குலைக்கும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறியதன் மூலம் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ஆட்சியின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கையானது என இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக (Dayan Jayatilleka) தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய சந்தையில் நுழைவதற்கு கட்டணச் சலுகைகளை தொடர்ந்து வழங்குவதற்கு முன்னதாக, முதலீட்டு ஊக்குவிப்பு வலையங்களில் உள்ள நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகளைப் பற்றி ஆராயுமாறு, தொழிலாளர் உரிமைகளுக்காக வாதிடும் ஒரு அமைப்பு ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

500 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. விவசாயத்துறை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக உலக வஙகியினால் வழங்கப்படும் இந்தக் கடன் பணத்தின் ஊடாக சில மாவட்டங்களில் கிராமங்களில் வசிக்கும் சுமார் 16 மில்லியன் மக்கள் பயனடைவார்களென உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.

தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் குயாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அவ்வப்போது கோஷ்டி மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி