இலங்கை தாதியர் சபைக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கான புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த 11ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 32 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்றதுடன், முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பிரதிநதித்துவம் செய்த பொதுச் சேவை ஐக்கிய தாதியர் சங்கம் மற்றும் சமன் ரத்னப்பிரியவின் அரச தாதியர் சங்கம் ஆகியவற்றை தோற்கடித்தது. ஜே.வி.பி பிரதிநிதித்துவம் செய்யும் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை தாதியர் சங்கம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த தாதியர் சபை (நர்சிங் கவுன்சில்,) 1988 ஆம் ஆண்டு பாராளுமன்ற சட்டத்தின் மூலம் செவிலியர் துறையில் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்கவும், பணியாளர்கள் மற்றும் செவிலியர்களின் இடமாற்றம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் முடிவுகளை எடுக்கவும் நிறுவப்பட்ட அதிகாரப்பூர்வ அமைப்பாகும்.

அனைத்து தாதியர் சேவையில் உள்ள 40,000 ஊழியர்களில் 37,000 தாதியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐந்து உறுப்பினர்கள் தாதியர் சபைக்கு தெரிவு செய்யப்பட்டனர் மற்றும் ஜே.வி.பி தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் நான்கு உறுப்பினர்கள் அதிகூடிய 66% வாக்கு வீதத்துடன் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுயேச்சையாகப் போட்டியிட்ட திருமதி புஷ்பா ரம்யா டி ஜைசா நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தேர்தலில் ஜே.வி.பி இன் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை தாதியர் சங்கம் 66% வாக்குகளை பெற்றுள்ளதுடன் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பிரதிநிதித்துவம் செய்யும் பொதுச்சேவை ஐக்கிய தாதியர் சங்கம் 17% வாக்குகளை பெற்றுள்ளதுடன். சமன் ரத்னப்பிரியவின் அரச தாதியர் சங்கம் 16% வாக்குகளை பெற்றுள்ளது.

தாதியர்களுக்கு மேலதிகமாக, ஆயுர்வேதம், தாதியர் கல்வி, சமூக சுகாதாரம், தனியார் தாதியர் பாடசாலைகள், மாகாண பொது சேவை மற்றும் விசேட சேவை செவிலியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு உறுப்பினர்கள் தாதியர் சபைக்கு தெரிவு செய்யப்படுவார்கள். இதன்படி, தெரிவு செய்யப்படவுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆகும். மேலும், பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 08 அதிகாரிகள் தாதியர் சபைக்கு பரிந்துரைக்கப்படவுள்ளனர்.

2011ஆம் ஆண்டு தாதியர் பேரவைத் தேர்தலின் பின்னர் 5 வருட காலம் 2016ஆம் ஆண்டு நிறைவடைந்த போதிலும் பல்வேறு அரசியல் மற்றும் தொழிற்சங்கங்களின் செல்வாக்கு காரணமாக இந்தத் தேர்தல் 5 வருடங்களாக நடைபெறவில்லை. எவ்வாறாயினும் அகில இலங்கை தாதியர் சங்கம் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் தேர்தலை டிசெம்பர் மாதம் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. அதன் பிரகாரம் கடந்த 11 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.

இவ்வாறு பல்வேறு அரசியல் அழுதங்களினால் நீண்டகாலமாக செயலிழந்திருந்த தாதியர் பேரவையை மீண்டும் உருவாக்க முடிந்துள்ள அதேவேளை, பொதுசன முன்னணிக்கு விசுவாசமான முருத்தெட்டுவே ஆநனந்த தேரரின் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம். தாதியர் துறையிலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு விசுவாசமான சமன் ரத்னப்பிரியவின் தீர்க்கமான அதிகாரத்தை இழந்துள்ளனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி