1200 x 80 DMirror

 
 

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் மற்றும் நாட்டின் அதிகாரிகளுக்கு இடையிலான மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்று(24) ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேற்று(23) நாட்டை வந்தடைந்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். 

நிதி அமைச்சு, மத்திய வங்கி உள்ளிட்ட சில நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றவுள்ளனர்.

இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது. 

எனினும், இதன்போது இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
 
 

வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோர் விரைவில் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வசதியாக குடிவரவு திணைக்களத்தில் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க நிதி பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் ஹர்ஷ த சில்வா தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பும் காலம் தாமதிக்கலாம் என ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மங்கள சமரவீரன் உயிரிழந்து ஆகஸ்ட் 24 ஆம் திகதியுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.


இதனையொட்டி ஆகஸ்ட் 24ஆம் திகதி பொல்கொட இல்லத்தில் விஷேட ஆராதனையும்இ 25ஆம் திகதி மகா சங்கரத்தினம் எனும் தலைப்பில் விசேட சமய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பின்னர்இ ஆகஸ்ட் 26ஆம் திகதி மாலை 03 மணிக்கு மாத்தறை நுபேவில் உள்ள பழைய டச்சு வர்த்தக மையத்தில் மங்களவின் நினைவு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பேராசிரியர் ரொஹான் சமரஜீவஇ ஷெஹான் மாலக ஆகியோரின் உரையும் இடம்பெறவுள்ளது. இதனை சமூக செயற்பாட்டாளர் ரந்துல டி சில்வா நெறிப்படுத்தப்படும்.

மேலும்இ அனுஷ்கா உதானா (வஸ்தி தயாரிப்பு) ஆகியோரின் நிகழ்வொன்றும் இடம்பெறவுள்ளது.

மலையக சிறுவர்களை பணிக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும் எனவும் இந்த விடயம் தொடர்பில் பெற்றோர் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

முட்டையொன்றின் விற்பனை விலையை குறைப்பதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி