இலங்கை கடனாளர்களை ஒருங்கிணைக்க தயார்
இலங்கையின் கடன் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர் நாடுகளும் ஒன்றிணைவது அவசியமானது என ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி (Shunichi Suzuki) தெரிவித்துள்ளார்.
சனத் நிஷாந்தவிற்கு தண்டனை வழங்குமாறு கோரி மற்றுமொரு மனு தாக்கல்
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவிற்கு தண்டனை வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று(30) மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
IMF உடனான பேச்சுவார்த்தை வெற்றி - அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை குறைப்பு
இலங்கையின் இன்றைய பொருளதாரத்தை பற்றி இன்னும் பலருக்கும் தெரியவில்லை. சிலர் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
எனினும் பலர் பொருளாதார பிரச்சினையின் ஆழத்தை அறிந்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றனர் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டின் எதிர்வரும் காலத்துக்கான இடைக்கால பாதீட்டு திட்டத்தை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்துக்கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்
சர்வதேச காணாமல் போனோர் தினம் இன்று!
சர்வதேச காணாமற்போனோர் தினம் இன்றாகும். உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
IMF ஊடாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் – அமெரிக்க தூதுவர்
இணக்கப்பாட்டின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) ஊடாக அமெரிக்கா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்(Julie J. Chung) தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றத்தில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் இன்று(30) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இன்று 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு
இன்று 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
முட்டைக்கு தட்டுப்பாடு – நுகர்வோர் விசனம்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு
மட்டக்குளியில் நேற்றிரவு(29) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு; 2000 பேக்கரிகள் மூடப்பட்டன
சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபா வரை அதிகரித்துள்ளது.