இலங்கைக்கு விரைவான மற்றும் பயனுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியா உதவும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

எரிபொருள் விலை குறைப்புடன் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், பயணக்கட்டணம் தொடர்பான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

மே 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 3,215 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவத்துள்ளார்.

தனியார் பஸ்களுக்கு நாளாந்தம் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்படுமானால், விலைகுறைப்புக்கு ஏற்ற பயனை பயணிகளுக்கு வழங்க தயாராகவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் செல்லும் வழியில் பொல்துவ சந்தியில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டபோது கடத்தப்பட்ட 50 கண்ணீர்ப் புகை குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் மீண்டும் நாடு திரும்புவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோர் நாளை வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் ்அலரி மாளிகை என்பவற்றை மீண்டும் கையளிக்க காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக உள்நாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என இங்கிலாந்து கட்சித் தலைவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்

இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ்(Antonio Guterres) தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி