நாடாளுமன்றம் செல்லும் வழியில் பொல்துவ சந்தியில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டபோது கடத்தப்பட்ட 50 கண்ணீர்ப் புகை குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒபேசேகரபுர – நாணயக்கார மாவத்தையில் நேற்று வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகளால் 31 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்  தல்துவ தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் பொரளை கோதமி வீதியில் அவர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டில் திருடப்பட்ட 50 கண்ணீர் புகை குண்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி