தீப்பற்றிய MSC Messina கப்பல் நாட்டின் கடல் எல்லைக்கு அப்பால் சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்தது.இன்று (27) காலை 5.30 அளவில் குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பித்ததாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள முக்கிய ஊடக நிறுவனங்களில் பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ள விடயம் சமூக ஊடகங்களில் கலந்துரையாடல்களுக்கு வழிவகுத்துள்ளது.

அனைத்து கைதிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற கொள்கையை மீறுவதும், அரசுக்கு சார்பான கைதிகளுக்கு விசேட சலுகைகளை வழங்குவதும் ஏனைய கைதிகளின் அடிப்படை உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் மீறுவதாக அமையுமென கைதிகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது.

தமது தந்தையின் கொலையில் குற்றவாளியான துமிந்த சில்வா விடுதலையானதைத் தொடர்ந்து தனது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர அச்சம் வெளியிட்டுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்றவரான கத்தார் நாட்டு இளம் தடகள வீரர் அப்தலெலா ஹாரவுன் இன்று உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் போர் முடிவிற்குவந்து 12 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையிலும், தமிழர்கள் வெள்ளைவான்களில் கடத்தப்பட்டு இரத்தக்கறை படிந்த சித்திரவதைக்கூடங்களில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவது இன்னும் தொடர்கின்றது என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

மஹகந்த அப்லேண்ட் தோட்டத்தில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் 09 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்றிரவு (25) இடம்பெற்றுள்ளது.

பொது மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

விளையாட்டு அமைச்சின் கீழ் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் உடற்தகுதி மையத்திற்கான (ஜிம்) உபகரணங்கள் வாங்குவதில் டெண்டர் மோசடி இடம்பெற்றுள்ளதாக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் முற்றிலும் பொய்யானவை என்று விளையாட்டு துறை அமைச்சு கூறுகிறது.

நாட்டிற்கு திரும்பியுள்ள சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

தனது தந்தையை கொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது தொடர்பில் ஹிருணிக்கா பிரேமசந்திர, ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார்.

"மழையில் கண்ணீரோடு பிரியாவிடை கொடுத்த ஹொங்ஹொங் மக்கள்" என்கிற தலைப்பில் ஆப்பிள் டெய்லி பத்திரிகை தன் வாசகர்களுக்கு நன்றி கூறியது.

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி கிராமத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் மகன் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களால் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படை, ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை மற்றும் ஜப்பானின் கடற்பாதுகாப்பு தன்னார்வ படையணி ஆகியன இணைந்து நடத்தும் கடற்பயிற்சி, திருகோணமலை கடற்படைத் தளத்தில் இன்று ஆரம்பமானது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி