சில தினங்களுக்கு முன்னர் மத்துகம பொலிஸ் காவலில் இருந்த ஒருவர் திடீரென இறந்தமைக்குக் காரணம் அவர் பொலிஸாரினால் தாக்கப்பட்டமைதான் என அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்ற குற்றத்தின் பேரில் மேற்படி 42 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். இறந்த நபர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் பின்னர் வைத்தியசாலையில் வைத்து அவர் இறந்துவிட்டதாகவும்;, அவருக்கு PCR பரிசோதனை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் ஆரம்பத்தில் கூறியிருந்தனர்.

எவ்வாறாயினும் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்படும் போது பொலிஸார் அவரை தாக்கியதாக அவ்விடத்திலிருந்த சிலரும் சந்தேக நபரின் உறவினர்களும் கூறியிருந்தனர். இதன்படி, பொலிஸார் இந்தக் கொலையை செய்துள்ளதாக இறந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.

40 வயதுடைய இறந்த நபர் கோவிட் நியுமோனியா நிலைமை காரணமாகவே இறந்துள்ளதாக மரண விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இறந்தவரின் உடலிலோ, உட்புறத்திலோ எவ்வித காயங்களும் காணப்படவில்லையெனவும் நேற்று (24) வெளியிட்ட அறிக்கையொன்றின் மூலம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொலிஸ் காவலில் ஆட்கள் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இப்படியான சம்பவங்கள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு இதுவரை தண்டனை வழங்கப்பட்டதாக இல்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி