1200 x 80 DMirror

 
 

உலகளாவிய அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் 900 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உணவு தூக்கி எறியப்படுகிறது.கடைகள், வீடுகள் மற்றும் உணவகங்களில் நுகர்வோருக்குக் கிடைக்கும் உணவுகளில் 17% நேரடியாக குப்பை தொட்டிக்குச் செல்கிறது என்பதை ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் வீணாகும் உணவுகள் பற்றிய குறியீடு வெளிப்படுத்தியது.

கடந்த மழை வெள்ளத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது சிறிய குளங்களில் தற்போது நீர் நிரம்பியுள்ள நிலையில், தற்போது அக்குள்ள குளங்களில்  முதலைகளின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பில் 11வது நாளாக இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இலங்கையில் போரின் கடைசி காலப்பகுதியில் இறந்தவர்களின் புள்ளிவிவரங்களை சர்வதேச ஆய்வின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் யூ.என்.ஆர்.சி. (ITJP) இலங்கையின் இறுதி யுத்தத்தின் மனித அழிவைப் பற்றிய உண்மையை வௌியிடுமாறு அரசாங்கத்தை கோரியுள்ளதுடன் ஒரு சர்வதேச விசாரணையை  அரசாங்கம் நடத்தத் தவறிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்மாந்துறை தனியார்வங்கி( HNB)கிளையின் உதவிமுகாமையாளருக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து கிளை நேற்று(12) வெள்ளிக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம், நாட்டின் தென்பகுதியின் பல இடங்களில் பொலிஸ் சித்திரவதை தொடர்பான 13 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, சித்திரவதைக்கு எதிரான இலங்கை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பில் 10வது நாளாக இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இலங்கையில் மிக விரைவில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சர்வதேச அளவில் எரிவாயு விலை அதிகரித்துள்ள நிலையில், ஒரு சிலிண்டருக்கு 750 ரூபா வரை நட்டம் ஏற்பட்டு வருவதாக கேஸ் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.முப்பீடங்களின் பிக்குகளின் ஒன்றியம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளது.

இராகலை தோட்டம் 2ஆம் பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட தொழிலாளர் குடியிருப்பில் இன்று (12) அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இடம்பெறும் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாராய்ச்சி திட்டத்தினை உடனடியாக நிறுத்துமாறும் மண்ணை வெளி பிரதேசங்களுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும் பிரதேச மீனவர்கள் நேற்று வியாழக்கிழமை மீன்பிடி துறைமுகத்தில் மண் ஏற்றப்பட்ட வாகனத்தின் முன்னாள் வாகனத்தை செல்ல விடாது தடுத்து தங்களது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் அண்மையில் பெற்ற குழந்தையை துன்புறுத்திய தாய் பற்றிய செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையை தத்தெடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் பொலிஸாருக்கு கிடைத்திருக்கின்றன.

அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் சட்டத்தரணிகள் குழு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. 

இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அது தொடர்பான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கந்து வட்டி கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இலட்சக்கணக்கான இலங்கை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாட்டிற்கு நீதி கோரி சர்வதேச மகளிர் தினத்தன்று வட மத்திய மாகாணத்தில் தொடங்கப்பட்ட 'சத்தியாக்கிரகம்' இன்று மூன்றாவது நாளாகவும்தொடர்கிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி