மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடக்கும் நோக்கில் இன்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பொலீசார் போராட்ட காரர்களின் பெயர்களை கேட்டு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.

Feature

இளம் தொழில் முயற்சியாளர்களிற்கு வழங்கப்படுவதாகச் சொல்லப்படும் காணித்துண்டுகள் தமிழர்களுக்கு செல்லக்கூடாது என்பதற்காகவே காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Feature

இலங்கை என்பது சுதந்திரமான நாடாகும். இங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்தின்படி ஆடையணிவதற்கான சுதந்திரம் உள்ளது. அவ்வாறிருக்கையில் புர்காவை தடைசெய்வதால் தற்போது காணப்படும் பிரச்சினைகள் மேலும் தீவிரமடையுமே தவிர, அவை தணியப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார்

Feature

இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் மீது தடை விதிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் தனது கவலையை தெரிவித்துள்ளது

Feature

ஐக்கிய மக்கள் சக்தி, இன்றைய தினம் தமது முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது.கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Feature

“ஆயுதக்குழு என்பது நமது தேவைக்காக நிகழ்ந்த சம்பவத்தினூடாக நம்மீது கட்டாயமாக திணிக்கப்பட்ட விடயமாகும். தற்போது அந்தத் தேவை மாறி, அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றது” என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

Feature

13 ஆம் திருத்த சட்டத்தை அமுலாக்குவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

Feature

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் எல்லாப் பிரிவுகளையும் முழுமையாக இயங்க வைக்கும் முகமாக சுகாதார, தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் குழு, நேரடி விஜயம்  ஒன்றை மேற்கொண்டுள்ளது.

Feature

கல்முனை கிரீன் பீல்ட் மக்களின் மிக நீண்ட நாள் பிரச்சினையாக இருந்து வந்த தனித் தண்ணீர் மாணி வழங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் வீட்டுத்திட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் தனித் தண்ணீர் மாணி வழங்கும் நிகழ்வு இன்று(15) திங்கட்கிழமை காலை 9.30க்கு கிரீன்பீல்ட் வளாகத்தில் நடைபெற்றது.

பாரிய மண் அகழ்வு மோசடியில் ஈடுபடுபவர்கள் அரச அதிகாரிகளின் உதவியுடன் காட்டை அழித்து கொள்ளை அடிப்பதாக கூறப்படுகின்றது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி