மட்டக்களப்பு - கரடியனாறு இந்து வித்தியாயலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் இன்று (30) சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் சத்துணவு திட்டத்தின் கீழ் பாடசாலையில் சோறுடன் கோழி இறைச்சிகறி தயாரித்து இன்று பகல் 195 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதனை சாப்பிட்ட சில மாணவர்களுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதையடுத்து அவர்களை உடனடியாக அருகிலுள்ள கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக 16 மாணவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவை பரிசோதனை செய்ததுடன் வழங்கப்பட்ட கோழி இறைச்சி பனிக்கட்டியில் இருந்து எடுத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதர பரிசோதகர்களின் சோதனையில் முதல் கட்டமாக தெரியவந்துள்ளதையடுத்து இது தொடர்பாக பொதுசுகாதார பரிசோதகர்கள் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தையடுத்து பாடசாலையின் முன் பெற்றோர்கள் ஒன்று திரண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
(கனகராசா சரவணன்)