1200 x 80 DMirror

 
 

மட்டக்குளியில் நேற்றிரவு(29) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி, துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் கூட்டிணைந்த திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு இடையிலான மோதல் நிலைமையே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கான காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 26 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி