மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமசந்திரவை அவமதிக்கும் வகையில் அவரது புகைப்படங்களை பகிரவேண்டாமென கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அநாகரிகமாக நடந்துகொள்ள வேண்டாம் என்றும் சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பயனாளிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இரண்டு சேவை முறைமைகளின் அடிப்படையில் ஒருநாள் சேவையூடாக வெளிநாட்டு கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை விரைவில் தீர்க்க, அரசாங்கமொன்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரச ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் சுற்றறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் இன்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் நகருக்கு அருகே உணரப்பட நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியது.

பாரத பிரதமரின் பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழு  நாளை (23) இலங்கை வரவுள்ளது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி முதலான பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், மொரட்டுவை மாநகர சபை உறுபபினர் ஒருவர் உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் கல்வியாண்டுக்கான பாடசாலைகளில் அடிப்படைத் தேவைகளை எவ்வித தட்டுப்பாடும் இன்றி பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

 

பாடசாலைகளின் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்குத் தேவையான கடதாசிகள் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அடுத்தாண்டு பாடசாலை சீருடைகளுக்கு தேவையான பொருட்களை வழங்குவது குறித்து உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் சீன அரசுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபரிலும் 2022 தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை நவம்பர் மாதத்திலும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 50 மில்லியன் டொலர் அபிவிருத்தி உதவிகளை வழங்க அவுஸ்ரேலியா முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினருமான ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி